ஆசிர்வாதம்
கடவுள் ஆபிராமைப் பார்த்து,
நீ எல்லா இடத்தையும் சுத்தி பாரு. கிழக்க, மேற்கே, வடக்கே, தெற்கே என்று
எல்லாத் திசையிலேயும் சுத்திப் பாரு. நீ பார்க்கிற எல்லாத்தையும் உனக்கும்
உன்னோட சந்ததிக்கும் என்றைக்கும் கொடுப்பேன்.
நீ எந்திரிச்சு கூடாரத்தைக் காலி பண்ணிட்டு எல்லா இடமும் சுத்து, நீ
எங்கெல்லாம் போறியோ, அது எவ்ளோ நீளமா இருந்தாலும் சரி, அகலமானாலும் சரி, நீ
போற இடம் எல்லாத்தையும் உனக்குக் கொடுக்கிறேன்.
ஆபிராம் – சரி கடவுளே.
அப்புறம், ஆபிராம் கூடாரத்தைக் காலி பண்ணிட்டு எபிரோன்-ல என்ற இடத்திலுள்ள
மம்ரே மக்கள் இருக்கிற சமமான பூமியிலே போய், கடவுளுக்கு ஒரு பலிபீடம்
கட்டினார்.
ஆபிராம் லோத்தை காப்பாற்றுதல்
அந்த நாட்களில், கீழ்க்கண்ட ராஜாக்கள் இருந்தார்கள். இவர்களில் எல்லாருமே
கெதர்லா கோமேர்-க்கு கீழ ஆட்சி செய்தாங்க, 13வது வருசத்தில இரண்டு அணியா
பிரிஞ்சாங்க. அது கீழ கொடுக்கப்பட்டது.
|
அணி 1
|
|
அணி 2
|
|
தேசம்
|
ராஜா
|
|
தேசம்
|
ராஜா
|
1
|
சிநெயார் |
அம்ராப்பேல் |
|
சோதோம் |
பேரா |
2 |
ஏலாசார் |
அரியோகு |
|
கொமோரா |
பிர்சா |
3 |
ஏலாம் |
கெதர்லா கோமேர் |
|
அத்மா |
சிநெயா |
4 |
ஜாதிகள் |
திதியால் |
|
செபோயீமின் |
செமேபரோர் |
5 |
—
|
—
|
|
பேலா |
சோவார் |
|
சண்டையிட்ட இடம் – சித்தீம் பள்ளத்தாக்கு |
இரண்டா பிரிஞ்சதாலேயும், கலகம் பண்ணினதாலேயும், கெதர்லாகோமேர் தலைமையில 1ம்
அணி 14வது வருசத்தில கீழ உள்ள எல்லா ஊரையும் அந்த மக்களையும் அழிச்சிட்டாங்க.
இடம்
|
மக்கள்
|
எல்பாரான் மட்டும் தோற்கடிச்சவங்க
|
அஸ்தரோத்கர்னாயீம் |
ரெப்பாயீமியர் |
காம் |
சூசிமியர் |
சாவேகீரியத்தாயீம் |
ஏமியர் |
சேயீர் |
ஓரியர் |
திரும்பி வந்து தோற்கடிச்சவங்க
|
காதேஸ்(என்மிஸ்பாத்) |
அமலேக்கியரின் நாடுகள் |
அத்சாத்சோன் தாமார் |
எமோரியர் |
அதனால 2வது அணியும் சீத்திம் பள்ளத்தாக்குல கூடி 1வது அணியும் சண்டை
போட்டாங்க. அதுல சோதோம், கொமோரா ராஜா-வை தவிர எல்லாரையும் கொன்னுட்டாங்க.
அப்புறம் சோதோம், கொமோரா – வை முழுக்க கொள்ளையடிச்சுட்டாங்க. அதுல சோதோம்
எதுக்க இருந்த லோத், அவன் கூட எல்லா பொருளையும் கொள்ளையடிச்சுட்டு
போய்ட்டாங்க.
அதுல தப்பிச்ச லோத்தோட ஒரு வேலைக்காரன் ஓடிப்போய், ஆபிராம் கிட்ட எல்லா
விவரத்தையும் சொன்னான்.
உடனே ஆபிராம் தன் வீட்டில இருந்த 318 பேருக்கு ஆயுதம் கொடுத்து, தாண்
அப்டிங்கிற ஊர் வரைக்கும் போய், ராத்திரி நேரத்திரல கெதர்லாகோமர் படையை தோற்கடிச்சுட்டு லோத்தையும் அவன் கூட இருந்த எல்லாரையும், எல்லா பொருளையும் கொண்டு வந்தான்.
அப்ப சோதோம் ராஜா, ஆபிராமுக்கு நன்றி சொல்ல, சோவே பள்ளத்தாக்கு அப்டிங்கிற
இடத்துல சந்திச்சாங்க.
அப்ப உன்னதமான கடவுளுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கு (சாலேமின் ராஜா) அப்பமும், திராட்சரசமும் கொண்டுவந்து ஆபிராமை நோக்கி
வானத்தையும், பூமியையும் படைச்ச உன்னதமான கடவுளுடைய ஆசிர்வாதம் ஆபிராமாகிய உனக்கு உண்டாவதாக என்று சொன்னார்.
ஆபிராம், தன்கிட்ட இருந்த எல்லாவற்றிலேயும் தசமபாகம் கொடுத்தார்.
சோதோம் ராஜா – ஆபிராம், எனக்கு இந்த மக்கள் மட்டும் போதும். நீ எல்லா பொன், பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கோ.
ஆபிராம் – வேண்டாம், வேண்டாம். எனக்கு பொன்னோ, பொருளோ வருதுன்னு சொன்னா அது கடவுள் கிட்ட இருந்து மட்டும் தான் கிடைக்கனும். நீங்க கொடுத்ததா இருக்கக் கூடாது. இந்த பொன்னோ பொருளோ எதுவுமே வேணாம்.
லோத்துக்குள்ளத எடுத்துக்கிடுறோம். அது தவிர போர்ல சண்டை போட்ட
என் கூட வந்த ஆநேர், எஸ்கோல் மற்றும் மம்ரே இவங்களுக்கு மட்டும் தேவையானதை கொடுங்க.
குறிப்பு :
சாலேமின் ராஜா – சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை.
தசமபாகம் – முதன் முதலாக தசமபாகம் கொடுக்கப்பட்டுள்ளது.
மம்ரே – இவங்க இடத்தில தான் ஆபிராம் குடியிருந்தான்.
ஆநேர், எஸ்கோல் – இவர்கள் இருவரும் மம்ரேவின் சகோதரர்கள்.