🙏 துணைப்பாடல்கள் & ஜெபங்கள்

உலகும் வானும் செய்தாளும்
உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்.

அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதி முதலெங்கர்த்தனுமாய்த்
தவறிலேகக்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்.

பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய் உருவாய்
நரரவதாரமாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்.

பொந்தியுபிலாத்ததி பதிநாளில் புகலரு பாடுகளை யேற்று உந்துஞ்
சிலுவையிலறையுண்டு உயிர்விட்டா ரென நம்புகிறேன்.

இறந்தே அடங்கிப்பாதாளம் இறங்கி மூன்றாந் தினமதிலே
இறந்தோரிடநின்றே உயிரோடெழுந்தாரெனவும் நம்புகிறேன்.

சந்ததமோட்சம் எழுந்தருளிச் சருவவல்ல பரனான எந்தை
தன்வல பாரிசமேயிருக்கின்றாரென நம்புகிறேன்.

உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே
ஜெயமாய்த் திரும்பவரு வாரெனச் சிந்தையார நம்புகிறேன்.

பரிசுத்தாவியை நம்புகிறேன். பரிசுத்தமாபொதுச்சபையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண் டென நம்புகிறேன்.

பாவ மன்னிப்புளதௌவும் மரித்தோருயிர்த் தெழுவாரெனவும்
ஓவா நித்தியசீவனமே உளதெனவும் யான் நம்புகிறேன்.