வாலிபர் மூவரின் கீதம்
(தானி 3:23)
கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே கர்த்தரைப் போற்றுங்கள் கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்
கர்த்தருடைய தூதர்களே. கர்த்தரைப் போற்றுங்கள். கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்
வானங்களே கர்த்தரைப் போற்றுங்கள். ஆகாய விரிவின் மேலுள்ள ஜலங்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தருடைய சகல வல்லமைகளே கர்த்தரைப் போற்றுங்கள்.
சூரிய சந்திரரே கர்த்தரைப் போற்றுங்கள்.
வானத்தின் நட்சத்திரங்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
மழையே பனியே கர்த்தரைப் போற்றுங்கள்.
தேவனுடைய காற்றுகளே கர்த்தரைப் போற்றுங்கள்.
அக்கினியே உஷ்ணமே கர்த்தரைப் போற்றுங்கள்.
மாரிகாலமே கோடைகாலமே கர்த்தரைப் போற்றுங்கள்.
மூடுபனியே ஆலங்கட்டியே கர்த்தரைப் போற்றுங்கள்.
பனிக்கட்டியே குளிரே கர்த்தரைப் போற்றுங்கள்.
உறைந்த நீரே உறைந்த மழையே கர்த்தரைப் போற்றுங்கள்.
இரவே பகலே. கர்த்தரைப் போற்றுங்கள் ஒளியே இருளே கர்த்தரைப் போற்றுங்கள்.
மின்னல்களே மேகங்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.
பூமியானது கர்த்தரைப் போற்றிப் புகழ்ந்து: என்றென்றைக்கும் அவரைத் துதிக்கக்கடவது.
மலைகளே குன்றுகளே கர்த்தரைப் போற்றுங்கள்
பூமியில் முளைத்தெலும்பும் எல்லாத் தாவரங்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
நீருற்றுகளே கர்த்தரைப் போற்றுங்கள். சமுத்திரங்களே நதிகளே கர்த்தரைப் போற்றுங்கள்.
மகா மச்சங்களே. நீர் வாளும் சகல ஜெந்துக்களே கர்த்தரைப் போற்றுங்கள். ஆகாயத்துச் சகல பறவைகளே கர்த்தரைப் போற்றுங்கள்.
காட்டு மிருகங்களே நாட்டு மிருகங்களே கர்த்தரைப் போற்றுங்கள்: மனுமக்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
இஸ்ரவேலர் கர்த்தரைப் போற்றி புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதிக்கக்கடவர்கள்.
கர்த்தருடைய ஆசாரியர்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தருடைய ஊழியக்காரரே கர்த்தரைப் போற்றுங்கள்.
நீதிமான்களின் ஆவிகளே ஆத்துமாக்களே கர்த்தரைப் போற்றுங்கள். பரிசுத்தமும் தாழ்மையுமுள்ள இருதயமுடைய மனிதர்களே கர்த்தரைப் போற்றுங்கள்.
அனனியாவே அசரியாவே மிகாவேலே கர்த்தரைப் போற்றுங்கள். கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள்.
பிதாவையும் குமாரனையும் பரிசுத்த ஆவியையும் போற்றுவோம்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதிப்போம்.
பரலோகத்தின் ஆகாய விரிவிலுள்ள கடவுளே நீர் துதிக்கப்படத்தக்கவர்: என்றென்றைக்கும் எல்லாவற்றிற்கும் மேலாகத் துதிக்கப்படுவீராக.