திருச்சபையின் கீதம்
தேவனே உம்மைத் துதிக்கிறோம்: உம்மைக் கர்த்தரென்று பிரஸ்தாபப்படுத்துகிறோம்.
நித்திய பிதாவாகிய உம்மை: பூமண்டலமெல்லாம் வணங்கும்
தேவதூதர் அனைவோரும் பரமண்டலங்களும் அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும்
கேரூபின்களும் சேராபின்களும் தேவரீரை ஒயாமல் புகழ்ந்து போற்றி
சேனைகளின் தேவனாகிய கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் வானமும் பூமியும் உமது மகிமையுள்ள மகத்துவத்தால் நிறைந்தன என்று முழங்குகிறார்கள்
அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய கூட்டம் உம்மைப் போற்றும். தீர்க்கதரிசிகளாகிய சிறப்புள்ள சங்கம் உம்மைப் போற்றும்.
இரத்தசாட்சிகளாகிய தைரிய சேனை உம்மைப் போற்றும்.
அளவில்லாத மகத்துவமுள்ள பிதாவாகிய தேவரீரையும். வணங்கப் படத்தக்க மெய்யான உம்முடைய ஒரே குமாரனையும்: தேற்றரவாளனான பரிசுத்த ஆவியையும்
உலகமெங்குமுள்ள பரிசுத்த சபை: பிரஸ்தாபப்படுத்தும்.
கிறிஸ்துவே தேவரீர் மகிமையின் ராஜா: நீரே பிதாவினுடைய நித்திய சுதன்
நீர் மனிதரை இரட்சிக்க ஏற்பட்டபொழுது கன்னியாஸ்திரியின் கர்ப்பத்தை அருவருக்கவில்லை
நீர் மரணத்தின் கொடுமையை வென்று: விசுவாசிகள் எல்லாருக்கும் மோட்ச இராஜ்யத்தைத் திறந்தீர்.
நீர் பிதாவின் மகிமையிலே: தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறீர்.
நீர் எங்களுக்கு நியாயாதிபதியாக: வருவீரென்று விசுவாசிக்கிறோம்.
உமது விலையுயர்ந்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட உமது அடியாருக்குச் சகாயஞ் செய்ய உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். எங்களை நித்திய மகிமையிலே உம்முடைய பரிசுத்தவான்களோடே சேர்த்துக் கொள்ளும்.
கர்த்தாவே உமது ஜனத்தை இரட்சித்து உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்: அவர்களை ஆண்டுகொண்டு என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
தினம் தினம் உம்மைத் தோத்தரிக்கிறோம்: எப்பொலுதும் சதாகாலங்களிலும் உமது நாமத்தை வணங்குகிறோம்.
ஆண்டவரே இந்நாளில் பாவஞ்செய்யாதபடி எங்களைக் காத்தருளும்: கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் எங்களுக்கு இரங்கும்.
கர்த்தாவே நாங்கள் உம்மை நம்பியிருக்கிறதால் உமது கிருபை எங்கள் மேல் இருப்பதாக கர்த்தாவே உம்மையே நம்பியிருக்கிறேன் நான் ஒருக்காலும் கலங்காதபடி செய்யும்.